செய்திகள் மற்றும் பார்வைகள்
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மாநில வேளாண் இயந்திரத் தகவல் மையத்தை பார்வையிட்டனர்

கோவில்பட்டி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நாற்பது விவசாயிகள், வேளாண் பொறியியல் தொடர்பான பல்வேறு தொழில்நுட்பங்களை அறிந்துகொள்வதற்காக சென்னை, நந்தனத்தில் உள்ள மாநில வேளாண் இயந்திரத் தகவல் மையத்தினை 25.04.2025 அன்று பார்வையிட்டனர்.
பேட்டரியால் இயங்கக்கூடிய களை எடுக்கும் கருவியின் செயல் விளக்கம்

கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் வட்டாரம் தெலுங்கு பாளையம் கிராமத்தில் பேட்டரியால் இயங்கக்கூடிய களை எடுக்கும் கருவியின் செயல் விளக்கம் விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.
டிராக்டரால் இயங்கக்கூடிய புதர் வெட்டும் கருவியின் செயல் விளக்கம்

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டாரம் குன்னத்துரம்பாளையம் கிராமத்தில் டிராக்டரால் இயங்கக்கூடிய புதர் வெட்டும் கருவியின் செயல் விளக்கம் விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.
மாட்டு சாணம் சேகரிக்கும் இயந்திரத்தின் செயல் விளக்கம்

ஈரோடு மாவட்டம், மொடகுறிச்கி வட்டாரம் வடபழனி கிராமத்தில் மாட்டு சாணம் சேகரிக்கும் இயந்திரத்தின் செயல் விளக்கம் விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது
தானியங்கி கதிர் அறுத்து கட்டும் இயந்திரத்தின் செயல் விளக்கம்

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டாரம் திருமலைசமுத்திரம் கிராமத்தில் தானியங்கி கதிர் அறுத்து கட்டும் இயந்திரத்தின் செயல் விளக்கம் விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.
அமர்ந்து இயக்கக்கூடிய விசை களையெடுக்கும் இயந்திரத்தின் செயல் விளக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டாரத்தில் உள்ள மலையம்பாக்கம் கிராமத்தில் விவசாயி வயலில் அமர்ந்து இயக்கக்கூடிய விசை களையெடுக்கும் இயந்திரத்தின் செயல் விளக்கம் விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.
மின்சாரம் மூலம் இயக்கப்படும் விலங்குகளைத் தடுக்கும் உயிர் ஒலியியல் கருவிகளின் செயல்விளக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டாரத்தில் உள்ள மலையம்பாக்கம் கிராமத்தில் ஒரு விவசாயி வயலில் மின்சாரம் மூலம் இயக்கப்படும் விலங்குகளைத் தடுக்கும் உயிர் ஒலியியல் கருவிகளின் செயல்விளக்கம் விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.
கள ஆய்வில் முதலமைச்சர்

மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் விண்ணமங்கலத்தில், வேளாண்மை பொறியியல் துறை மூலம் "சி மற்றும் டி" பிரிவு வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சூரிய சக்தியால் இயங்கும் மூன்று சக்கரவண்டியின் செயல்முறை விளக்கம்

பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR) உருவாக்கிய சூரிய சக்தியால் இயங்கும் மூன்று சக்கரவண்டியின் செயல்முறை விளக்கம்
வாழை மையத் தண்டினை பதனப்படுத்தும் இயந்திரத்தின் செயல்விளக்கம்

கோயம்புத்தூர் மண்டல மையத்தின் ICAR-CIAE இன் முதன்மை விஞ்ஞானி மூலம் வாழை மையத் தண்டினை பதனப்படுத்தும் செயல்விளக்கம் நடைப் பெற்றது
வெங்காயம் தாள் நீக்கும், தரம் பிரிக்கும் இயந்திரம் செயல் விளக்கம்

பெரம்பலூர் மாவட்டம் இருரில் வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் இந்தியா தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக வெங்காயம் தாள் நீக்கும் இயந்திரம், வெங்காயம் தரம் பிரிக்கும் இயந்திரங்களின் செயல் விளக்கம் விவசாயிகளுக்கு செய்து காட்டபட்டது. சுமார் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு இயந்திரங்கள் குறித்த விபரங்களைக் கேட்டு அறிந்தனர். மேலும், புதிய மற்றும் நவீன தொழில் நுட் பம் கொண்ட இந்த இயந்திரத்திற்கான செயல் விளக்கம் மிகவும் பயனள்ளதாக இருந்ததாக விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் வட்டாரம் கீழக்கரை கிராமத்தில் இதே செயல் விளக்கம் நடைபெற்றது. இங்கும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.