சூரிய மின் வேலி அமைத்தல்
நோக்கங்கள்
- ✴ மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையே ஏற்படும் மோதலைத் தவிர்க்க
- வழிவகை செய்தல்.
- ✴ விவசாயிகளின் விளை நிலங்களில் உள்ள பயிர்களை காட்டுப்பன்றி,
- காட்டெருமை, மான் மற்றும் யானை போன்ற விலங்குகளிடமிருந்து
- பாதுகாக்க, மானிய விலையில் சூரிய மின்வேலி அமைத்தல்.
நிதி ஆதாரம்
- ✴ ஒன்றிய அரசு - 60 % ,
- ✴ மாநில அரசு - 40 %
மானியங்களும் சலுகைகளும்
- ✴ சூரிய மின்வேலி நிறுவுதல் செலவில் 40 % மானியம் விவசாயிகளுக்க அவர்களின் வங்கி கணக்கில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
திட்டப் பகுதி
- ✴ அனைத்து மாவட்டங்கள் (சென்னை நீங்கலாக)
செயல்படுத்தப்படும் பணிகள்
-
✴ யானைகள் தவிர்த்த பிற விலங்குகளுக்கான வேலி அமைப்பு - 5 வரிசை, 7 வரிசை மற்றும் 10 வரிசை வேலி கம்பிகளைக் கொண்டது.
-
✴ யானைகளை விரட்டிட கூடுதலாக தொங்கும் மின்வேலி அமைப்பு - 5 வரிசை, 7 வரிசை மற்றும் 10 வரிசை வேலி கம்பிகளைக் கொண்டது.
தகுதி
- ✴ ஒரு விவசாயி அதிக பட்சமாக 2 எக்டர் பரப்பிற்கு, 566 மீட்டர் நீளம் வரைமானிய உதவிக்கு தகுதியுடையவர் ஆவார். ஒரு விவசாயிக்கு அதிக பட்சமாக ரூ.1.12 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
அணுக வேண்டிய அலுவலர்
- ✴ சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை